நான் சந்தோசமாக இருக்கும் ஒவ்வொரு தருனத்திறக்கும்
நட்புதான் அதிக காரண மாக இருக்கும்.
என் பள்ளி காலங்களில் எனக்காக என்னவேனாலும்செய்யும் என் தோழி பிரியா ...
இன்று நான் அவளுடைய நினைவில் மட்டுமே இருக்கிறேன்.. முதன் முதலாக எனக்காக அழுத அவளை என் உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன்.
அவள் நிலைமை எந்த பெண்ணிற்கும் வரகூடாது..
அவள் நிலைமை எந்த பெண்ணிற்கும் வரகூடாது..
கூட பொறந்த தம்பியே சந்தேக பட்டு பேசும் சூழ்நிலையில் வாழ்பவள்.. அவளுக்கு நான் மட்டுமே அன்று ஆறுதல்.. என்னிடம் சொல்லி அழும்போது என் மனம் அவளுக்காக எதுமே செய்யமுடியவில்லையே என்று அழும்...
நான் பெற்றவள் என்னை உதாசினபடுத்தியதால் வேதனை படுகிறேன் என்றால் .. அவள் பெற்றவள் வாயினாலேயே கேவலப்படும் ஜீவன்..
இன்றும் அவளை நினைத்தால் என் கண்களில் கண்ணீர்...
அவளை நான் மறுபடியும் சந்திக்க கடவளிடம் பிரார்த்திக்கிறேன்...
எங்கு இருக்கிறாள் என்று தெரிய வில்லை..
நான் சந்தோசப்படுவது இந்த நட்பால் தான் ...
வேதனை படுவதும் இந்த நட்பால் தான்.


No comments:
Post a Comment