Saturday, December 25, 2010

EN KAALLOORI VAALKAI...

நான் ப்ரியாவை பிரிய காரணம் என் கல்லூரி படிப்பு தான் ... என் தூரத்து சொந்தம் சொன்னதால கருர்க்கு  படிக்க போனேன்..

நான் பள்ளியை   விட்டு  வெளி வந்த அன்று  நடந்ததை என்னால்  மறக்க முடியாது..
அன்றுதான் என் அம்மாவை நான் எதுர்த்து பேசினேன்.. எனக்காக கல்யாணம் பண்ணி என்னை விட்டுட்டு போயிட்டியே  அம்மான்னு ... அந்த வார்த்தைக்காக என் அம்மா வருத்தபட்டதாக தெரியவில்லை   .. அதுக்கு அப்பறமும் என் அம்மாகூட நான் இல்லை
...
நான் கரூர்ல ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் படிச்சேன்..

கல்லூரி விடுதியில்     தங்கி படிச்சேன்.. அங்க PARENTS DAY  அன்னைக்கு எல்லாருடைய PARENTS  M  வருவாங்க .. எனக்கு என் பெரியப்பா , பெரியம்மா வருவாங்க...
அதெல்லாம் வேதனைய இருந்துச்சு..

அங்கதான் எனக்கு தாய்போல பாசம் காட்ட ஒருத்தி வந்தா.. பாரதி ..
அழகா இருப்பா .. கவிதை SUPER AH எழுதுவா.. என் மேல உயிரை இருப்பா.. நான் சொல்லுவேன்.. உன் கல்யாணத்துக்கு நான் வரமாட்டேன்னு .. எதுக்குன்னா அது அவ என்னை விட்டு பிரியற நாள்னு...

எனக்காகவே அவ நெறைய கவிதை  எழுதிருக்கா....
அவளோட கண்ணு அழகா இருக்கும்... அவ      B .COM (CA )..
நான் தான் அவ மேல பாசமா இருக்கற மாதிரி தெரியும்.. உண்மையா அவ தான் என் மேல பாசமா இருப்பா.. வெளிக்கட்டிக்க மாட்ட. நாங்க பிரிஞ்ச நாளை என்னால் மறக்க முடியாது.

இனி பார்க்க நேர்ந்தாலும் .. பார்க்க மாட்டேன் ..
மறுபடியும் அவளை பிரிய என் மனதில் தைரியம் இல்லை.

NATPU

நான் சந்தோசமாக இருக்கும் ஒவ்வொரு தருனத்திறக்கும் 
நட்புதான் அதிக காரண மாக இருக்கும்.

என் பள்ளி காலங்களில் எனக்காக என்னவேனாலும்செய்யும் என் தோழி பிரியா ... 
   இன்று நான் அவளுடைய நினைவில் மட்டுமே இருக்கிறேன்.. முதன் முதலாக எனக்காக அழுத அவளை என் உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன்.
 அவள் நிலைமை எந்த பெண்ணிற்கும்  வரகூடாது..

கூட பொறந்த தம்பியே சந்தேக பட்டு பேசும் சூழ்நிலையில் வாழ்பவள்.. அவளுக்கு நான் மட்டுமே அன்று ஆறுதல்.. என்னிடம் சொல்லி அழும்போது என் மனம் அவளுக்காக எதுமே செய்யமுடியவில்லையே என்று அழும்...

நான் பெற்றவள் என்னை உதாசினபடுத்தியதால் வேதனை படுகிறேன் என்றால் .. அவள் பெற்றவள் வாயினாலேயே கேவலப்படும் ஜீவன்..
 இன்றும் அவளை நினைத்தால் என் கண்களில் கண்ணீர்...

அவளை நான் மறுபடியும் சந்திக்க கடவளிடம் பிரார்த்திக்கிறேன்...
எங்கு இருக்கிறாள் என்று தெரிய வில்லை..
 நான் சந்தோசப்படுவது இந்த நட்பால் தான் ...
வேதனை படுவதும் இந்த நட்பால் தான்.

Tuesday, December 14, 2010

ENNAIPATRY

நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட பெண்.... ஆகையால் தான் என் அளவில்லா துன்பங்களை தாங்கும் சக்தி எனக்கிருக்கிறது.....

என் தாயின் வாழ்க்கை இரு கண்களை போன்றது....

அதில் ஒரு கண்ணின் ஒழி தான் நான்...
நான் உலகை பார்த்ததும் அந்த கண் அஸ்தமித்து போய்விட்டது.......

என் தாய் இன்று உலகில் வாழ துணையாக இருப்பது மற்றொரு கண்....